முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமா செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? அதிபர் சிறிசேனா விளக்கம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்றும், புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால் அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.  இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்யும் படி இலங்கை அதிபர் சிறிசேனா கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், இதுகுறித்து பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு. புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால் அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து