முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் மோடி: அமித்ஷா, துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
 
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த முறையும் மோடியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்காக பா.ஜ.க.வினர் இரவு பகலாக தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாரணாசியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் உள்ள காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். 11.30 மணியளவில் வாரணாசி கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் வாரணாசியில் பிரம்மாண்ட பேரணி நடத்தி அசத்தினார் பிரதமர் மோடி. பிறகு அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து