எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐ.பி.எல். போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
____________
நடுவர் மீது நடவடிக்கை இல்லை: பி.சி.சி.ஐ
இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.
____________
பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்கள். ஐ.பி.எல். தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர். தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், நேற்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், நேற்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
____________
ரிஷ்ப்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் டோனி மகள்
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை அணி, கேப்டன் டோனியின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.
இந்நிலையில், போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக ஐ.பி.எல். நிர்வகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், டோனி ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை சொல்வது போல் இருந்தது. அதனை ரிஷப்பும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.
இதனிடையே, ரிஷப் பண்ட்க்கு டோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், டோனியின் மகள் ஜிவா அழகான கொஞ்சும் மழலை மொழியில் ‘அ..ஆ.. இ..ஈ’ என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குழந்தை ஜிவா தமிழில் சில சொற்களை பேசும் வீடியோக்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் அவ்வவ்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
____________
வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்: வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்
12 வது ஐ.பி.எல். போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முதல் அணியாக மும்பை அணி தேர்வாகியுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதியது. அப்போது 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெற்றது. இதில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டிக்கு பின்பு ஹர்பஜன் பதிவிட்ட ட்வீட், அதில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it, #CSK” எனத் தெரிவித்துள்ளார்.
__________________
ரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 38(25) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. அதனை அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கட்டிவிட்டார்.
ரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல். நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் ஒரு ஜென் டில்மேன் கேம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
____________
கிரிக்கெட் ரசிகர்கள்மீது தடியடி
புதுச்சேரியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அகன்ற திரையில் பார்ப்பதற்கு ஏராளமானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் போட்டியைக் காண்பதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
_____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 900 ஆனது
07 Dec 2025ஜகர்தா, சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


