முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150 கோடி மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமே அழுத்தமாக இருக்கிறது : சொல்கிறார் ஹர்திக் பாண்ட்யா

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : உலகக் கோப்பையை வெற்றி பெறுவதில் மன அழுத்தம் இல்லை, ஆனால் 150 கோடி மக்களின் எதிர்பார்ப்பே அழுத்தமாக இருக்கிறது ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிப்பு...

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த கோப்பையை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத வகையில் தொடர் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா, நியூஸிலாந்து அணிகளை தவிர அனைத்து அணிகளும் மற்ற அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவும், நியூஸிலாந்து நேருக்கு நேர் மோதவிருந்த போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரண்டு அணிகளின் முழு பலம் வெளிப்படாமல் போய்விட்டது.

நம்பிக்கையை...

இந்தச் சூழலில் உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, “உலகக் கோப்பை வெல்வதில் எந்த அழுத்தமும் இல்லை. கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்ற 150 கோடி மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமே எங்களுக்கு அழுத்தம். கோப்பையை எனது கையில் ஏந்த நான் விரும்புகிறேன். அதை எப்போதெல்லாம் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அதீத நம்பிக்கையை பெறுகிறேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து