முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைகளின் சடலங்களை தின்றதால் 500-க்கும் மேற்பட்ட கழுகுகள் மரணம்: ஆப்பிரிக்க வனத்துறை தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஆப்பிரிக்காவில் யானைகளின் சடலங்களை தின்றதால் 500-க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500-க்கும் மேற்பட்ட கழுகுகள் உண்டன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் சடலங்களை உண்பது வழக்கம். ஆனால், இந்த யானைகளின் சடலங்களை தின்ற கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

இறந்த கழுகுகளுள் 468 கழுகுகள் வெள்ளை நிறம் கொண்ட கழுகுகள் ஆகும். இந்த கழுகுகள் மிக மோசமான, ஆபத்து ஏற்படுத்தும் பறவை இனங்களில் ஒன்றாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் பட்டியலில் இடம் பெற்றதாகும். மேலும் இவற்றுள் 2 கழுகுகள் டவினி எனப்படும் அரிய வகை கழுகுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இறந்த யானைகளின் சடலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த கழுகுகள் எந்த இடத்தில் உள்ளன? யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மைக்கான காரணம் என்ன? என்பது பற்றிய விரிவான தகவல்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து