முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி உரை சாதாரணமாக உள்ளது - காங்கிரஸ் கருத்து

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஜனாதிபதி உரை, கவரும் வகையில் இல்லை. முழுவதும் மிகச்சாதாரணமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சுரேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஜனாதிபதி உரை, கவரும் வகையில் இல்லை. முழுவதும் மிகச்சாதாரணமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதையே ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள் பற்றி ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்படவில்லை. வேலைவாய்ப்பு பிரச்சினை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருப்பது பற்றியோ, முதலீட்டு பற்றாக்குறை பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து