முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டியிடும் - மாயாவதி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : இனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன, இருந்தும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதை தொடர்ந்து தேர்தலுக்கு பிறகு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இனி அனைத்து தேர்தல்களிலும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிந்தைய சமாஜ்வாடி கட்சியின் செயல்பாடுகளே தனித்து போட்டியிடும் முடிவுக்கு காரணம் என மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து