முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 28 முதல் - ஜூலை 30-ம் தேதி வரை தமிழக சட்டசபை மானியக் கூட்ட தொடர் 23 நாட்கள் நடைபெறும் - அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை மானியக் கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை 23 நாட்கள் சபை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முதல்வர் பங்கேற்பு...

தமிழக சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுக்கூட்டம், தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நேற்று நடைபெற்றது. இந்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகியோரும், திமுக சார்பில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன், கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி, காங்கிரஸ்சார்பில் ராமசாமி, முஸ்லீம்லீக் சார்பில் அபுபக்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இரங்கல் தீர்மானம்...

இந்த கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை, வரும் 28ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்நது ஆர்.கனகராஜ் ராதாமணி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.

இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 1-ம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சசூழல் மற்று்ம வனத்துறை குறித்த விவாதங்கள் தொடங்கும்., ஜூலை 2-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, மற்றும் உயர்கல்வித்துறை, ஜூலை 3-ம் தேதி கூட்டுறவுத்துறை உணவுமற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஜூலை 4-ம் தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, ஜூலை 5-ம் தேதி மீன்வளம், கால்நடைபராமரிப்பு , பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத்துறை பால்வளத்துறை ஆகிய மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெறும்.

சிறுபான்மைநலத்துறை...

மீண்டும் ஜூலை 8-ம் தேதி கூடும் சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சிறப்புத்திட்டசெயலாக்கத்துறை, ஜூலை 9-ம் தேதி நீதிநிருவாகம், சிறைச்சாலைகள் .சட்டத்துறை, ஜூலை 10-ம் தேதி சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்ஸ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநலத்துறை, ஜூலை 11-ம் தேதி தொழில்துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை, ஜூலை 12-ம் தேதி கைத்தறி, மற்றும் துணிநூல்,செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும்.

வேளாண்துறை...

இதையடுத்து ஜூலை 15-ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் , பாசனம், ஜூலை 16-ம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ஜூலை 17-ம்தேதி வேளாண்துறை, ஜூலை 18-ம் தேதி சுற்றுலா - கலைமற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை, ஜூலை 19-ம் தேதி  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கைச்சீற்றங்கள் குறித்த துயர்தணிப்புத்துறை ஆகிய மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும்.

வேலைவாய்ப்புத் துறை...

அதைத்தொடர்ந்து வரும் ஜூலை 22-ம் தேதி சட்டசபை கூடும். ஜூலை 22-ல் காவல்துறை , தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, ஜூலை 23-ம் தேதி காவல்துறை , தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவுத்துறை தகவல் தொழில்நுட்பத்துறை, ஜூலை 24-ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, தமிழ்வளர்ச்சி, ஜூலை 25-ம் தேதி இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிர்வாகம், , போக்குவரத்துத்துறை, ஜூலை 26-ம் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கதர்கிராமத்தொழில்கள் கைவினைப்பொருட்கள் ஆகிய துறைகளின் விவாதங்கள் நடைபெறும்.

சட்ட முன்வடிவுகள்...

இதையடுத்து 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. ஜூலை 29ம் தேதி பொதுத்துறை, மாநிலச்சட்டமன்றம் ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். ஜூலை 30-ம் தேதி பொதுத்துறை மாநிலச் சட்டமன்றம், ஆளுநர், மற்றும் அமைச்சரவை, நிதித்துறை வீட்டுவசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை திட்டம், வளர்ச்சி மற்றும சிறப்புமுயற்சிக் துறை ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெறும். அமைச்சர்களின் பதிலுரையை தொடர்ந்து அரசின் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அலுவல்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் கூட்டத்தொடர் நடைபெறும் ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் இடம் பெறும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் ஜூலை 1ம்தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து