முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக ஹபீஸ் சையத் மீது பாக். வழக்குப் பதிவு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் - உத்தவா என்ற பயங்கரவாத அமைப்பிற்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அத்துடன் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ஜமாத் - உத்தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லாகூர், முல்தான் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய பகுதிகளில் மொத்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து