எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,- புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து மீட்க முன்எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது. இதில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டியில் நடைபெற்ற புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களிடத்தில் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு (ஐNஊழுஐளு) தெரிவிக்கின்றது. புயல் மற்றும் வெள்ளம் வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக புயல் மற்றும் வெள்ளம் எச்சரிக்கை முன் அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகைய எச்சரிக்கை அறிவிப்புகள் மாவட்ட அவசர கால செயலாக்க மையம் வாயிலாக பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மீட்புக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எவ்வாறு சென்றடைகிறது என்பதை கண்காணித்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான திருவாடானை வருவாய் வட்டம், தொண்டி கிராமத்திலும், கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி, தொண்டியில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் பங்கேற்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் விதமாகவும், மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கி பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கிடும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. குறிப்பாக, மழை வெள்ளம் காரணமாக தொண்டி கிராமத்தில் உள்ள தனியார் வணிக வளாகம் இடிந்து விழுந்து 80 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அவசர கால செயலாக்க மையத்திலிருந்து வயர்லெஸ் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு மீட்புப்பணிக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவல்துறை மீட்புக்குழு அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்கும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தொண்டி கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள முருகன் கோவில் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் மருத்துவ உதவி வழங்கிடும் விதமாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல மழைவெள்ளம் காரணமாக தொண்டியில் உள்ள தனியார் உணவு விடுதியில் 30 பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், தொண்டியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் 5 நபர்கள் சிக்கியுள்ளதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு மீட்புக்குழு அலுவலர்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து, தொண்டி அரசு மருத்துவமனையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தொண்டி கிராமப் பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில் முதலை தென்படுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக வனத்துறையின் மூலமும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் மாசு ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக எச்சரிக்கை தகவல் அறிவிப்பு வழங்கப்பட்டு பொது சுகாதாரத் துறையின் மூலம் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல, கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் பல்வேறு அவசரகால எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன், காவல்துணை கண்காணிப்பாளர் (பொ) திரு.ஆர்.சுரேஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொண்டி நிலைய அலுவலர் ஜெ.அருளானந்து, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கார்த்திகேஷ்வரன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன், எம்.கோகிலா, செஞ்சிலுவைச்சங்க மாவட்டச்செயலர் ராக்லண்ட் மதுரம் உட்பட அரசு அலுவலர்கள், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.