முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். மேலும், 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததாலும், அங்கு எம்.பி. பதவி காலியாகாததாலும் மீண்டும் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் மதன் லால் சைனி கடந்த ஜூனில் உயிரிழந்தார். இதனால், ஒரு எம்.பி. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிக்கு வருகிற 26-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடந்த 14-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. தொடர்ந்து, இந்த எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மன்மோகன் சிங் கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. இந்நிலையில், மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான மன்மோகன் சிங்கிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து