எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்தியா அணி 3 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து முன்னிலை.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரஹானே (81 ரன்), ரவீந்திர ஜடேஜா (58 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தொடுத்த தாக்குதலில் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மிடில் வரிசையில் கொஞ்சம் அதிரடி காட்டிய ரோஸ்டன் சேஸ் 48 ரன்களில் (74 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார்.
விக்கெட்வீழ்த்தியஇந்தியபவுலர்இஷாந்த்ஷர்மாகேப்டன்விராட்கோலியுடன்மகிழ்ச்சியைபகிர்ந்துகொள்கிறார்விக்கெட்வீழ்த்தியஇந்தியபவுலர்இஷாந்த்ஷர்மாகேப்டன்விராட்கோலியுடன்மகிழ்ச்சியைபகிர்ந்துகொள்கிறார்ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலையில் காணப்பட்டது. இந்த சூழலில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது 2 ஓவர்களில் 3 பேட்ஸ்மேன்களுக்கு அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ஷாய் ஹோப் (24 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். ஹெட்மயர் (35 ரன், 47 பந்து, 3 பவுண்டரி) பந்து வீசிய இஷாந்திடமே சிக்கினார். கெமார் ரோச் (0) ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் பிடிபட்டார். 5 ரன் இடைவெளியில் மூன்று தலை உருண்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி நெருக்கடியில் சிக்கி தவித்தது.2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜாசன் ஹோல்டர் (10 ரன்), மிக்யூல் கம்மின்ஸ் (0) அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீசின் எஞ்சிய 2 விக்கெட்டுகளும் மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்து ஆச்சரியப்படுத்தியது. சக வீரர் கம்மின்சின் துணையுடன் அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்த ஜாசன் ஹோல்டர் 39 ரன்களில் (65 பந்து, 5 பவுண்டரி) முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் கம்மின்ஸ் (0) ஜடேஜாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். 45 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத கம்மின்ஸ், அதிக பந்துகளை சந்தித்தும் ரன் கணக்கை தொடங்காமல் அவுட் ஆன மோசமான சாதனை வரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், அகர்வால் களம் இறங்கினர். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆட்டத்தின் 13.2 வது ஓவரில் அகர்வால் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்ததாக புஜாரா வந்து களம் இறங்க ராகுலுடன் ஜோடி சேர்ந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தில் ராகுல் 38 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி களம் இறங்க அவருடன் தொடர்ந்து விளையாடிய புஜாரா 25 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி வீரர் ரகானே கேப்டன் கோலி இணைந்து விளையாட்டை தொடங்கினார். இறுதியில் ஆட்டத்தின் 72 வது ஓவர் முடிவில் கேப்டன் கோலி, ரகானே இருவரும் இணைந்து அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இறுதியில் இந்திய அணி தரப்பில் கோலி 51 ரன்களுடனும், ரகானே 5 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்களும், கெமார் ரோச் 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.