முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி - ஜெய்ப்பூரை பந்தாடியது மும்பை

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை பந்தாடி வீழ்த்தியது யு மும்பா அணி. புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே மும்பை அணி சிறப்பாக ஆடி புள்ளிகளை எடுத்தது. ஜெய்ப்பூர் அணியும் அவ்வப்போது பாயிண்ட்களை எடுத்து வந்தது. முடிவில், யு மும்பா அணி 47 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி ஐந்தாம் இடத்தில் உள்ளது. மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணியை 32-23 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து