முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ஆசிரியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாம், வாழ்வில் முன்னேற உறுதுணையாய் இருப்பவர்கள் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள். அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அந்நாள், விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியரான அவரது பிறந்த நாளை நண்பர்களும் மாணவர்களும் கொண்டாட வேண்டும் என விரும்பிய போது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து செப்டம்பர் 5-ம்  தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், கனவையும், அறிவினையும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பெற அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இதனை இளைய சமூகத்தின் எண்ணத்தில் ஆசிரியர்கள் உட்செலுத்துகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டை கட்டமைக்க அவர்கள் பெரிதும் உதவுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தனித்துவமிக்க ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக திகழும் டாக்டர். ராதா கிருஷ்ணன் பிறந்த இந்நாளில் இந்தியா தன் மரியாதையை அவருக்கு செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து