முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திராயன் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பும்: இஸ்ரோ தகவல்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : சந்திராயன் - 2 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து அனுப்ப முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் - 2 விண்கலத்தின் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ. தூரம் இருந்த நிலையில், கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது. தொடர்ந்து அதன் சிக்னல்களை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கிடையில் சந்திராயன் - 2 விண்கலத்தின் அடுத்தகட்ட நிலை என்ன என்பது குறித்த தகவலை இஸ்ரோ விளக்கி உள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில்,

விக்ரம் லேண்டர் மற்றம் பிரக்யான் ரோவர் உடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளது. மீதமுள்ள 95 சதவீதம் தொடர்பு அப்படியே தான் உள்ளது. அது தான் சந்திராயன் - 2 ஆர்பிட்டர். இது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது நிலவிற்கு அருவில் உள்ள புகைப்படங்களை எடுத்து அனுப்பும். இதன் மூலம் நிலவில் ஆய்வை தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் அடுத்த ஓராண்டிற்கு நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து பல புகைப்படங்களை அனுப்பும். நிலவில் தரையிறங்கும் முயற்சியில் ஈடுபட்ட லேண்டரின் நிலை குறித்தும் ஆர்பிட்டர் புகைப்படங்களை எடுத்து அனுப்பும். லேண்டரின் உட்புறம் உள்ள ரோவர் பிரக்யானின் வாழ்நாள் 14 நாட்கள் மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து