முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதாக மகன் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லாகூர் : சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் உசேன் ஷெரீப் குற்றம்சாட்டி உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். நவாஸ் ஷெரீப் மீது 3 ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றான அல்அசிசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே 69 வயதான நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து இவர் கடந்த 21-ம் தேதி இரவு லாகூர் சர்வீஸஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் உசேன் ஷெரீப் குற்றம்சாட்டி உள்ளார். லண்டனில் இருக்கும் அவர் தனது டுவிட்டர் பதிவில் இதுதொடர்பாக கூறியதாவது:-

எனது தந்தையின் ரத்த அணுக்களில் வி‌ஷம் கலந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16 ஆயிரமாக குறைந்துள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இம்ரான்கான் அரசு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நவாஸ் ஷெரீப் கட்சியின் தலைவர் அதா உலா கூறும்போது, நவாஸ் ஷெரீப்பின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனாலும் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவே டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை தேறும் வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து