முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016 - ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்றுவதில் இன்னும் இழுபறி நிலை உள்ளது.இந்த விவகாரத்தில் டேவிட் கேமரூன், தெரசா மே என 2 பிரதமர்கள் பதவி விலகியது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து கடந்த மாதம் 31-ந் தேதி விலகுவதற்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார். அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடியாமல் தாமதம் ஏற்பட்டால் சாக்கடை குழியில் விழுந்து சாவேன் என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வெளியேற வேண்டும், அக்டோபர் 31 என்ற கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றம் கூறியது.

அதைத் தொடர்ந்து கெடுவை ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிப்பதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு சம்மதம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து மக்களின் உத்தரவை பெறுகிற நோக்கத்தில் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்தார். இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. டிசம்பர் 12-ந் தேதி அங்கு தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதத்துக்காக நாட்டு மக்களிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து