எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அம்மாவின் அரசு மீது ஸ்டாலின் மட்டும் குறைகூறுகிறார் என்று சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
கோதாவரி - காவேரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுகின்ற பொழுது மேட்டூரிலிருந்து கரூர், மாயனூர் கதவணை வரை ஆற்றின் இரு கரைப் பகுதிகளிலும் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரேற்று மூலமாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். இதுவே அம்மாவின் அரசின் லட்சியம், இதை நிறைவேற்றியே தீருவோம். இந்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம் அம்மாவினுடைய கனவுத் திட்டம். அம்மா மறைந்தாலும் அம்மாவின் அரசு அதை தொடர்ந்து செயல்படுத்தும். அந்த வகையில், கரூரிலிருந்து குண்டாறு வரை அந்தத் திட்டத்தை இணைக்கவிருக்கின்றோம். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை எங்களின் அரசு நிறைவேற்றியே தீரும். அடுத்த ஜூலை மாதத்திற்குள் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். எங்களுடைய அரசு, அம்மாவின் கனவுத் திட்டமாக காவிரி -குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பியிருக்கின்றோம். இத்திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து காவிரியிலிருந்து குண்டாறு வரையிலான இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம். இத்திட்டம் பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படும். கரூர், மாயனூர் கதவணையிலிருந்து குண்டாறு வரை இணைக்கின்றபொழுது, உபரிநீர் கால்வாய் வழியாக செல்வதால் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் செழிக்கும். வைகை அணை நிரப்பப்பட்டு இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் செழிக்கும். சேலம் மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்டங்கள் முழுவதும் செழிக்க எங்களின் அரசு நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீரும். எங்கள் திட்டங்களெல்லாம் எதிர்காலத்திலும் விவசாயிகள் பயனடைகின்ற திட்டங்களாக இருக்கின்றது. எதிர்காலத் தமிழகம் ஒளிமயமானதாக இருக்க வேண்டும், வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர், குடிநீருக்குத் தேவையான நீர் முழுவதுமாக வழங்க வேண்டும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எங்களுடைய லட்சியம்.
முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் 56,267 மனுக்கள் பெறப்பட்டதில் 26,712 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 27,010 மனுக்கள் பல்வேறு நிலைகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களையும் மறு ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 2545 மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது, அதற்கும் தீர்வு காணப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் 12,989 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகை ஒரே நேரத்தில் வழங்குகிற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. மக்கள் வைக்கின்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டு இருக்கின்ற அரசு அம்மாவின் அரசு. இப்படி எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை, இந்த ஆட்சி நடக்கின்றதா? இல்லையா? என்று கேள்வி கேட்கிறார். இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.;
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் அரசு விழா: ரூ.113.51 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தார்
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 48 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 113 கோடியே 51 லட
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
17 Jul 2025புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.