எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை போட்டி போட்டு அளித்தனர். சென்னையில் ஐந்து இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர்.
தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்பமனுத்தாக்கல் 15, 16 தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமனு விநியோகம் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இன்று வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது. மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதே போல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராயபுரம் எஸ்.என் செட்டித் தெருவில் தொடங்கிய விருப்பமனு தாக்கலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் ஏ.டி.அரசு, துறைமுகம் தொகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனுக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.
தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.முக. சார்பில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன்,கோகுல இந்திரா, ஜெ பேரவை மாநில இணைசெயலாளர் ரமேஷ், தி,நகர் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்றனர். இதே போல் தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருகம்பாக்கம் ராதா மஹாலில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து விருப்பமனுக்களை பெற்றனர். மேயர் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன், அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி.க்கள் வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.அசோக், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மகளிர் அணி இணைச்செயலாளர் நூர்ஜகான், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விருப்பமனுக்களை வழங்கினர்.
இதே போல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட துறைமுகம் தொகுதியில் மோகன், குமாரி நாராயணன் எழும்பூர் தொகுதியில் பிரிதிவி ராஜன், வேளாங்கண்ணி ஆயிரம் விளக்கில் வழக்கறிஞர் சதாசிவம், புஷ்பாநகர் ஆறுமுகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விருப்பமனுக்களை அளித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்பமனுக்களை வழங்கினர். இதே போல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தங்களது விருப்ப மனுக்களை போட்டி போட்டுக் கொண்டு நிர்வாகிகளிடம் வழங்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.
09 Jul 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.