எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. 8 ஆண்டுகளுக்குபின்னர் இவ்விரு அணிகளும் சென்னையில் மோத உள்ளதால், ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளன. முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி, போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் மணிஷ் பாண்டே, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் கோலி, ரோஹித், புதிதாக இணைந்த மயங்க் அகர்வால் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அதேபோல், விண்டீஸ் அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பழைய அதிரடி பார்மிற்கே திரும்பியுள்ள வெஸ்ட் இண்டீஸை, சமபலத்துடன் உள்ள இந்திய அணி வெளுத்து வாங்குமா? என்பது இன்று தெரிந்துவிடும். இந்தியா-விண்டீஸ் அணிகள் கடைசியாக சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் மோதின. தற்போது 8 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் மீண்டும் இங்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராகுல் துவங்குவாரா?
உள்ளூர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பி வரும் இந்திய வீரர் கே.எல்.ராகுல், அதே உத்வேகத்துடன் விண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலும் வெளுத்து வாங்கி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவாண் காயத்தால் விலக, டி20 தொடரில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார், ராகுல். ஆனால், ஒருநாள் தொடரில் தவாணுக்கு மாற்றாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளதால், ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புவிக்கு பதில் ஷர்தல்:
விண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தின் வீரியம் இன்றளவும் குறையாத காரணத்தால், ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக பந்துவீச்சாளர் ஷர்தல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேப்பாக்கத்தில் இந்தியா எப்படி?
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 7-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இரு போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. விண்டீஸ் அணி இங்கு விளையாடிய 6 போட்டிகளில் 1-ல் தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
மழை வாய்ப்பு?
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை முதலே சென்னையில் பரவலாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்கவுள்ள சேப்பாக்கத்தில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், போட்டி நேரத்தில் மழை வர அதிகபட்ச வாய்ப்பு 24 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சற்று மனதை தேற்றிக்கொள்ளலாம்.
இந்தியா, விண்டீஸ் அணிகள் மொத்தம் 130 ஒருநாள் போட்டிகளில் மோதின. இரு அணிகளும் தலா 62 போட்டியில் வெற்றி பெற்று சமபலத்துடன் திகழ்ந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.