முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

26-ம் தேதி சூரிய கிரகணம்: சபரிமலை கோவில் நடை 4 மணி நேரம் அடைப்பு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

வருகிற 26-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. இதையொட்டி சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறந்த முதல் நாளில் இருந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வருகிற 27-ம் தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கான நாள் நெருங்குவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது. இதனால் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 26-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. இதையொட்டி சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது. 26-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேக மும் நடைபெறும். அன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசே‌ஷ தீபாராதனை காட்டப்படும். மறுநாள் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவுடன் கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து