முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாட்சியில் முதலிடம் பெற்ற தமிழகம் - முதல்வர் இ.பி.எஸ்.க்கு சரத்குமார் பாராட்டு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது:-

தேசிய அளவில் சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அவற்றின் செயல்திறன், வேளாண்மை, வா்த்தகம், தொழில், மனிதவள மேம்பாடு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் வளா்ச்சி, நீதி நிர்வாகம் - பொது மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நல்லாட்சி மாநிலத்தில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருவதை, மத்திய அரசு வழங்கிய நல்லாட்சி தரக்குறியீட்டின் வாயிலாக உணரலாம். தமிழக அரசின் நல்லாட்சி தொடர்வதற்கு உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் விழிப்புடன் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சட்டம், ஒழுங்கு துறையிலும், நிர்வாக ரீதியாகவும் முதன்மை பெற்றுள்ள தமிழக அரசுக்கும், தமிழகத்தை கெளரவித்த மத்திய அரசிற்கும் என் சார்பிலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்வதாக சரத்குமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து