முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களியக்காவிளை காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

களியக்காவிளை சோதனை சாவடியில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஆய்வாளர்தமிழ்நாடு - கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, அன்றைய தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல்,  கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்பதையும் சட்டப்பேரவையில் நான் அறிவித்து இருந்தேன். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில கொண்டு சிறப்பினமாக அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து