முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை எதிர்கொண்டு தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும்: கவர்னர் பன்வாரிலால் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, சட்டப்பேரவையில்,  110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது  என்றார். இந்நிலையில், ஊரடங்கு குறித்து பேசிய தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோகித், பிரதமரின் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடித்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்வார்கள் என நம்புகிறேன். கொரோனாவை தடுக்கும் சவாலை எதிர்கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கவர்னர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து