முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப்புழக்கத்தை உறுதி செய்ய வங்கிகளிடம் வலியுறுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் சொல்கிறார்

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், நாட்டில் பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளிடம் வலியுறுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அதே சமயம், மாநில அரசுகளும், வங்கிப் பணம் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அறிவுறுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் ஏ.டி.எம்.கள் மூலம் மக்களுக்குத் தேவையான பணம் உரிய நேரத்தில் கிடைக்க வங்கிகள் உறுதி செய்யும் வகையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே சமயம், வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் உரிய இடைவெளியை பின்பற்றுமாறும், வங்கிப் பணிகளை டிஜிட்டல் முறையில் செய்யுமாறும் தொடர்ந்து பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து