முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 5.000 பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் டெண்டுல்கர்

சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர். இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் டெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இது போன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து