Idhayam Matrimony

சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒருசேர கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை  மக்கள் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளும் கோரி வருகின்றன. இதனால், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள பல்வேறு நாடுகளில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவிலும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில்  ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மே 4-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மேலும் 4 வாரங்களை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து