முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்  தள்ளுபடி செய்தது.

ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தை அணுகும்படி மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து