முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து இந்திய மருத்துவ கவுன்சில் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 19 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இந்திய மருத்துவ கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது. இதற்கிடையே தமிழகமும் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பை சில தளர்வுகளுடன் அறிவித்தது. 

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முன்னோடி நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த தேசிய தொற்று நோய்  நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப் கௌர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அப்போது, கொரோனா குறித்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேட்டறிந்தனர். இந்நிகழ்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து