முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து சமய தலைவர்களுடன் இன்று தலைமைச்செயலர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் அனைத்து சமயத் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து சமய வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மாநிலங்கள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் தனி மனித இடைவெளியுடன் பொதுமக்கள் வர அனுமதிக்கலாம் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. இது குறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

இதையடுத்து மத அமைப்புகள், சமயத்தலைவர்களுடன் இன்று தலைமைச்செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து தலைமைச் செயலர் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடித விவரம் வருமாறு:-

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத்தலங்களை ஜூன் 8 முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிப்பாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துகளை பெற ஜூன் 3 புதன்கிழமை மாலை 4-45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் 2-வது கட்டத்திலுள்ள கூட்ட அரங்கில் சமயத் தலைவர்களுடன் எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைமுறை உள்ளது. இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து