முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ம் ஆண்டு முடியும் வரை எல்லையை மூடும் ஆஸ்திரேலியா

புதன்கிழமை, 17 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : 2020-ம் ஆண்டு முடியும் வரை ஆஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் அவற்றின் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக முடங்கியுள்ளன. கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்கும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் எல்லை மூடலை பின்பற்றி வருகின்றன.

இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020-ம் ஆண்டு வரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. எனினும் சில விலக்குகளையும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத் துறை அமைச்சர் பிர்மின்கங் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, வெளிநாடுகளிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைத் தடுத்து வருகிறோம். ஆஸ்திரேலியாவில் எல்லை மூடல் 2020-ம் ஆண்டு வரை தொடரும். எனினும் இதிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து