எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி : தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக செய்ய அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இது ஒரு சோதனையான நேரம். இன்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய். இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சில வழிமுறைகளை அறிவித்து, அதனை பின்பற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் மூலமாக நோய்ப் பரவலை ஓரளவிற்கு நாம் தடுத்திருக்கின்றோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தொழிற்சாலைகள் இயங்குவது தடைபட்டிருக்கிறது. இந்த நோய்ப் பரவலைத் தடுக்கின்ற வழிமுறைகளை அரசு கண்டறிந்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினாலே, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவிகித பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பு கொடுத்து, தொழிற்சாலைகள் எல்லாம் தற்பொழுது இயங்கி வருகின்றன. இருந்தாலும், இன்னும் சில கட்டுப்பாடுகளை நாங்கள் வைத்திருக்கின்றோம்.
ஏனென்றால், இது ஒரு புதிய நோய், இது எவ்வாறு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றது என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், உயிர் முக்கியமாக இருப்பதால், அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு முக்கியம். எனவேதான், இவ்வளவு கட்டுப்பாடுகளோடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் நன்றாக இயங்க வேண்டும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்ற அடிப்படையிலே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தொழிலதிபர்கள் கவனமாகக் கையாள வேண்டும்.
இல்லையெனில், தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்துத் தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதினால், இது, நாம் ஒவ்வொருவரும் அக்கறையோடு செயல்பட வேண்டிய நேரம்.
அதனால் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு தக்க பாதுகாப்பு செய்து தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் இயங்குவதற்கு தேவையான கடனுதவிகளை அறிவித்திருக்கிறது. இதனை வங்கி மேலாளர்களும் தெரிவித்தார்கள்.
ஓசூர் தொழிற்பேட்டையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை சுமார் 139 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். 20 விழுக்காடு கடனுதவி வழங்கப்படுமென்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி, வங்கி கடனுக்கு விண்ணப்பித்த குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தேவையான கடனுதவியை வழங்குவதற்கு வங்கிகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் ஒசூர் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகமாக வருகின்றபொழுதுதான் பொருளாதார மேம்பாடு அடைய முடியும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். அந்நியச் செலவாணியை மீட்டுத் தருகின்ற ஒரு பகுதியாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.
அரசு இதற்காக முன்னுரிமை வழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு அரசாங்கமும் நிலம், மின்சாரம் போன்ற தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உடனடியாக அனைத்து அனுமதிகளும் கிடைப்பதற்கு Single Window System ஏற்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க முன்வந்து, அவர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைக் களைவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, தொழில் புரிபவர்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாக செய்ய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.