முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் பன்னாட்டு மலர் ஏல மையம் : முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஓசூரில் 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் நேற்று ஆய்வு நடத்தினார்.  சிறு, குறு, நடுத்தர தொழிற் கூட்டமைப்பினர், தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். விவசாய சங்க பிரதிநிதிகளிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ஓசூரில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மு.தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன் மற்றும் என்.மனோரஞ்சிதம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் க.பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து