முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவிலிருந்து குணமடைந்த அமைச்சர் தங்கமணி டிஸ்சார்ஜ்

திங்கட்கிழமை, 20 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முழுமையாக குணமடைந்ததை யடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். 

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிசிச்சை பெற்று குணமடைந்தனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கடந்த 8-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்ததையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து