முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார்.

இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ. பால்துரை இறப்பு குறித்து மதுரை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தினார்.  விசாரணைக்கு பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவர்கள் குழு பால்துரை உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

பால்துரை பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பால்துரை உடல் தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து