முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : எஸ்.பி.பி.யின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன என்று அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (வயது 75) சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  எஸ்.பி.பி. உடல் உறுப்புகள் சீராக இயங்கி வரும் நிலையில், நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிச்சைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போது அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.  எஸ்.பி.பி. மகன் சரண் சமூக வலைதளத்தில்,

அப்பாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இன்று (நேற்று) நானும், எனது சகோதரியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். சகோதரியை பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைந்தார் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து