முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி, குமரி, விருதுநகரில் நடக்கவிருந்த தமிழக முதல்வரின் ஆய்வு கூட்ட நிகழ்ச்சிகள் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

மேலும் அந்தந்த மாவட்டங்களில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை 24 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில் 22.09.2020 அன்று முற்பகல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்திலும்,  23.09.2020 அன்று முற்பகல் கன்னியாகுமரி மாவட்டத்திலும், பிற்பகல் விருதுநகர் மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது,

இந்நிலையில் 23.09.2020 அன்று பாரத பிரதமர் மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தவுள்ளதால், இதில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டி உள்ளது,

எனவே தமிழக முதல்வரின்  சுற்றுப்பயண நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 22.09.2020 அன்று இராமநாதபுரம்  மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும் முதல்வர் பங்கேற்கிறார்.

22.09.2020 பிற்பகல் தூத்துக்குடி மாவட்டத்திலும், 23.09.2020 அன்று கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 21.09.2020 அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்து அன்றிரவு மதுரையில் தங்குகிறார்.

22.09.2020 அன்று காலை மதுரையிலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து