முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கலவர வழக்கில் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள், ஆத்திரமூட்டும் வகையில் பேசியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை, கடந்த 17-ம்  தேதி புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 17000 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத், உமர் காலித், நதீம் கான் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  

டெல்லியில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. எதிர்ப்பு தர்ணா போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரத்தை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை. பாதுகாப்பு கருதி சாட்சியின் பெரும் குறிப்பிடப்படவில்லை. கலவரத்தைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குழுவின் ஒரு பகுதியாக இந்த சாட்சி இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாட்சியின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  டெல்லி கலவர வழக்கில் இதுவரை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய அரசியல் தலைவர் குர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து