முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. 

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.  இந்நிலையில், 2020-ம் ஆண்டு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து