முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 23-ம் தேதி முதல் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

புதன்கிழமை, 14 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 23-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி அல்லது தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 

தேர்வர்களும் பெற்றோர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து