முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் நமது அ.தி.மு.க. இயக்கம் : மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி பட பேசினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் மதுரை கிழக்கு தொகுதியில் 49 அடி உயரமுள்ள கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கருப்பாயூரணியில் நடைபெற்றது இதற்கு மதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தக்கார் பாண்டி தலைமை தாங்கினார்  மாவட்ட. இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ்முன்னிலை வகித்தார் 

மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர் செந்தில்குமார், மாவட்ட விவசாயப் பிரிவுச் பொருளாளர் அரசு, கிளை கழக செயலாளர்கள் பாண்டி ,திருப்பதி, மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார் 

இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி,மாவட்ட கழக பொருளாளர் எஸ்.அம்பலம், மாவட்டக் கழக துணைச் செயலாளர் முத்துகுமார், மேலூர் நகர செயலாளர் எஸ்.ஏ.ஏ.பாஸ்கரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்பி முத்துகிருஷ்ணன் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேதுராமன்,மாவட்ட, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா ஹோசிமின், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கருத்த கண்ணன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் திருநகர் செல்வகுமார் , ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால்,, மாவட்ட இளைஞரணி இணைசெயலாளர் பொன் ராஜேந்திரன், மற்றும் வக்கீல் ஈரோடு சாமி வக்கீல் காசிநாதன்துரை, சூர்யா நகர் பி புருஷோத்தமன், தேன் சுகுமாரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் ராஜன்செல்லப்பா பேசியதாவது, 

கருணாநிதி என்ற தீய சக்தியை நாட்டை விட்டு அப்புறப்படுத்த புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார் தற்போது 49 ஆண்டுகள் ஆகிறது இந்த 49 ஆண்டுகளில் இந்த இயக்கம் ஆலமரம் போல் பரந்து விரிந்துள்ளது 

16 லட்சம் தொண்டர்கள் புரட்சித்தலைவர் உருவாக்கினார் அவரின் மறைவிற்குப் பின் புரட்சிதலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார் அதுமட்டுமில்லாது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநில கட்சி அதிக முறை ஆட்சி செய்த இயக்கம் என்று கணக்கிட்டால் புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்தப் மனித இயக்கம் தான் முதலிடத்தில் உள்ளது  கருணாநிதி வல்லவர் ஆனால் நல்லவர் இல்லை

அவரது மகன் ஸ்டாலின் நல்லவரும் இல்லை வல்லவரும் இல்லை சட்டமன்றத்தில் பேசும்பொழுது கூட கையில் துண்டு சீட்டு வைத்துக் கொண்டு தான் பேசுவார்   வருகின்ற சட்டமன்ற தேர்தல் என்பது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாகும் தர்மத்தின் வழியில் நமது முதலமைச்சரும் துணை முதலமைச்சர் உள்ளனர் அதர்மத்தின் வழியில் எதிர்க்கட்சிகள் உள்ளது தர்மம் தோற்பது போல இருக்கும் முடிவில் தர்மம் தான் வெல்லும் அதேபோல் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கழகம் வெற்றி பெறும் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய முழக்கமான இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணி ஆற்றும் அதற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றியை அதற்கு சாட்சி என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து