முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார் பிளெஸ்சிஸ் பேட்டி

திங்கட்கிழமை, 2 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடந்த 55வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின. 

இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த நிலையில், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து எளிதில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் ருதுராஜ் ஆட்டமிழக்காமல் விளையாடி 62 ரன்கள் எடுத்தது வெற்றி பெற பெரிதும் உதவியது. 

இதுபற்றி பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில், இந்த சீசன் எங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. ஆனால் நாங்கள் 3 வெற்றிகளுடன் போட்டியை முடித்துள்ளோம். எங்களுடைய அணியில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார். 

நெருக்கடியான நேரத்தில் நின்று விளையாடுகிறார் என எனக்கு தோன்றுகிறது. இளம் வீரர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு இதுபோன்ற தகுதிகளே தேவையாக உள்ளது. எனக்குள் கிரிக்கெட் பொதிந்து கிடக்கிறது. அதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து