முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று  மாலை 5 மணி முதல் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து 42 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரிக்கு வந்து சேருகிறது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்தேக்கத்திற்கு தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து நேற்று  மாலை 5 மணி முதல் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதையொட்டி பூண்டி ஏரி வடிகால் பகுதியில் உள்ள 42 கிராமங்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து