முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தும்கா கருவூல நிதி மோசடி வழக்கு: லல்லுவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி : தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் லல்லு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால்நடை தீவன ஊழல் தொடா்பாக, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். சில வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.   

இந்நிலையில், கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் லல்லு பிரசாத் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  லல்லு அனைத்து சிறை விதிகளையும் பின்பற்றுவதாகவும்,  அடுத்த விசாரணையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்மிதா அக்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் லல்லு பிரசாத், பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து