முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல்: அரியானாவில் டிச.10-ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அரியானா மாநில அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிசம்பர் 10-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அரியானா மாநில அரசு நேற்று அறிவித்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள்,  கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 நாள்கள் பள்ளிகள் திறக்கப்படாது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று தெரிவித்தார். அரியானா மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 746 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து