எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை திறந்து வைத்தார்.
மேலும், பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10 ஆயிரம் திறன் பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் கடந்த 11.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் 4 மாவட்டங்களில் அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 10 மாவட்டங்களில் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் சேலம், திருவண்ணாமலை மாவட்டம் – வந்தவாசி வட்டம், சென்னாவரம், திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம், தருமபுரி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உபகரணங்களுடன் கூடிய 10 பகல் நேர பராமரிப்பு மையங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார். இம்மையங்களை பராமரிக்க அரசின் பங்களிப்பாக ஆண்டுதோறும் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
2020 - 2021–ம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்ட அறிக்கையில், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர், பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்கு, தக்க செயலிகளுடன் கூடிய 10 ஆயிரம் திறன்பேசிகள், பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
10 ஆயிரம் திறன்பேசி வழங்கும் திட்டம்
அதன்படி, பார்வையற்ற மற்றும் கேட்கும்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ளவும், நவீன தகவல் தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்திட ஏதுவாகவும், 10 கோடி ரூபாய் செலவில் தக்க செயலிகளுடன் கூடிய 10,000 திறன்பேசிகளை பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் நேற்று 7 பார்வை மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்பேசிகளை வழங்கி துவக்கி வைத்தார்.
முதலமைச்சரால் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்த சிறந்த சமூகப் பணியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
3 கலெக்டர்களுக்கு விருது
மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2018–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கும், 2019–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தனுக்கும், 2020–ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட கலெக்டர் விருதினை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும், முதலமைச்சர் நேற்று வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சமூகநலத் துறை அமைச்சர் வி. சரோஜா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
06 Sep 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை பற்றிய அதிபர் ட்ரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
செங்கோட்டையன் பதவி பறிப்பு: புதிய பொறுப்பாளரை நியமித்தார் எடப்பாடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவருடைய பொறுப்புக்குபுதிய பொறுப்பாளரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை: கட்சி பதவி பறிப்பு குறித்து செங்கோட்டையன் கருத்து
06 Sep 2025ஈரோடு : என் மீதான நடவடிக்கைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்துள்ளசெங்கோட்டையன், விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதவி பறிப்பு குறித்து
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிப்பு: எடப்பாடி அதிரடி
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வார ராசிபலன்
06 Sep 2025 -
அமித்ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
06 Sep 2025புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார்.