எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
முன்னனி வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக செயல்பட்டு ரன்குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெய்க்வாட், சதமடித்து அசத்தினார். தற்போது 157 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மேற்கு மண்டல அணி தற்போதுவரை 68 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மிஸ்ரா ஓய்வு அறிவிப்பு
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (வயது 42) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். இவர் இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன அவர் திறமையான சுழற்பந்து வீச்சாளராக அறியப்பட்டார்.
42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் அஸ்வின், ஜடேஜா சாஹல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களின் வருகையால் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்தார். இந்த சூழலில் தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அமித் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அறிவித்துள்ளார்.
சினெர் அரையிறுதிக்கு தகுதி
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-1, 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் அரையிறுதில் பெலிக்ஸ் ஆகர் அலியாசீம் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் எம்.எஸ்.தோனி
'கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3,7-5, 3-6 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். அரையிறுதில் அல்காரஸ் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில், ஜோகோவிச் விளையாடிய இந்த காலிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரையிறுதிக்கு பாம்ப்ரி தகுதி
யுஎஸ் ஓபனில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் பாம்ப்ரி முதன்முதலாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் பாம்ப்ரி - வீனஸ் காலிறுதியில் வென்று அசத்தியுள்ளார்கள். இந்தியாவின் யூகி பாம்ப்ரியும் நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸும் காலிறுதியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம், குரேஷியாவின் நிகோலா மெக்டிக்கும் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் பாம்ப்ரி - வீனஸ் இணையினர் 6-3, 6-7(8), 6-3 என்ற செட்களில் வென்று அசத்தினார்கள். ஜுனியர் ஆஸி. ஓபனில் 2009இல் சாம்பியன் பட்டம் வென்ற பாம்ப்ரி சீனியர் போட்டிகளில் தற்போதுதான் தனது உச்சத்தை அடைந்துள்ளார். அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் ஆறாவது இடத்தில் ஜோ சாலிஸ்பரி - நீல் ஸ்குப்ஸ்கி இணையுடன் மோதவிருக்கிறார்கள். ஏற்கெனவே, இந்தியாவில் இருந்து இரட்டையர் பிரிவில் பல கிராண்ட்ஸ்லாம் பதக்கங்கள் கிடைத்துள்ளன. தற்போது, அதில் மற்றுமொரு மகுடத்தை பாம்ப்ரி சேர்ப்பாரா என்ற ஆர்வம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
யூ.ஏ.இ. அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், கடைசி அணியாக போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் அணியின் 17 பேர் கொண்ட வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2016 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகம் அணி பங்கேற்றிருந்தது. அதன்பின்னர், இப்போது மீண்டும் போட்டியை நடத்தும் அணியாக பங்கேற்றுள்ளது. அணி விவரம்: முகமது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரஃபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முகமது ஃபரூக், முகமது ஜவ்வதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் சிங், சிம்ரன்ஜீத் சிங், சகீர் கான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
04 Sep 2025சென்னை, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குமோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈட
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.