முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: 19-ல் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு: வானிலை மையம்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக கடலோரப்‌ பகுதியை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர்‌, நாமக்கல்‌, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

இன்றும், நாளையும் தென் தமிழக மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளைப்‌ பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடனும்‌ , காலை நேரங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 

கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்சமாக நாகப்பட்டினம்‌, ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்‌) தலா 9 செ.மீ., ராமநாதபுரம்‌ 8 செ.மீ., திருத்துறைப்பூண்டி, பாபநாசம்‌, மண்டபம்‌ தலா 7 செ.மீ., மதுக்கூர்‌, மணிமுத்தாறு, ராமேஸ்வரம்‌, தலைஞாயிறு தலா 6 செ.மீ., நீடாமங்கலம், ஸ்ரீவைகுண்டம், திருவாரூர், காயல்பட்டினம்‌ தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து