எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். துறைதோறும் சாதனைகள் நிகழ்த்தி விருதுகளை குவித்து இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனையை உங்களால் சொல்லமுடியுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பா.பென்ஜமின் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
எம்.ஜி.ஆரின் 104–வது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மதுரவாயல் கங்காநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது. அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம் இது. இந்த கூட்டத்தில் மாநாடு போன்று ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் பென்ஜமின் தலைமை வகித்து பேசியதாவது:–
எம்.ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகள் ஆனாலும் அவருக்கு பிறந்த நாள் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. வேறு எந்த தலைவருக்கும் இதுபோன்று பிறந்த நாள் விழாக்கள் நடைபெற்றது இல்லை. எம்.ஜி.ஆரை பார்த்திராதவர்கள் கூட அவரை நேசிக்கிறார்கள். 32 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஒரே இயக்கம் அதி.மு.க. தான். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இந்த இயக்கத்தின் கொள்கை இதுதான் என்று புரட்சித்தலைவர் கூறினார்.
எனவே தான் மக்கள் இன்றும் அவரது புகழை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். சிறு வயதில் அவர் வறுமையில் இருந்தார். கடுமையான உழைப்பினால் அவர் உயர்ந்த நிலைக்கு வந்தார். கொடை வள்ளலாக மாறினார். மக்களுக்கு வாரிவாரி கொடுத்தார். தான் சிறுவயதில் உணவுக்கு கஷ்டப்பட்டதை எண்ணி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் பலர் எம்.ஜி.ஆரின் சத்துணவு சாப்பிட்டு இந்த அளவுக்கு வந்தவர்கள். கிராமங்களின் முன்னேற்றத்திற்கு அவர் தனிக்கவனம் செலுத்தினார். நகர்ப்புற சாலைகளையும் கிராமப்புற சாலைகளையும் இணைத்தார். கிராமப்புறங்களுக்கும் குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு வாரிவாரி வழங்கினார்.
ஒரு இயக்கம் ஆரம்பித்து 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு எங்கும் இல்லை. அந்த வரலாற்றை படைத்தவர் புரட்சித்தலைவர். அவர் இருக்கும்போது கருணாநிதியை ஓடஓட விரட்டினார். அவர் ஆட்சியில் இருக்கும் வரை கோட்டை பக்கம் கருணாநிதியால் வரமுடியவில்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை வழிநடத்தினார். 17 லட்சம் உறுப்பினர்களாக இருந்த இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களை இணைத்தார். எந்த இயக்கத்திற்கும் இல்லாத சிறப்பை இந்த இயக்கத்திற்கு பெற்று தந்தார். தி.மு.க.வினர் உருளுகிறார்கள். புரள்கிறார்கள். ஆனால் இந்த இயக்கத்தை அவர்கள் அசைக்க முடியவில்லை. அசைக்கவும் முடியாது. அப்படிப்பட்ட அடித்தளத்தை இரு தலைவர்களும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையும் ஆட்சிக்கு வந்தது என்றால் அது அ தி.மு.க. தான். 32 ஆண்டுகளுக்கு பின் இப்படிப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறோம். அம்மாவின் மறைவிற்கு பின் இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். இருபெரும் தலைவர்களிடம் பாடம் கற்றவர்கள் நாங்கள். இந்த ஆட்சி 10 நாள் தான் இருக்கும், 3 மாதம் தான் இருக்கும் என்று தப்புத்தப்பாக ஸ்டாலின் கணக்கு போட்டார். ஆனால் இன்று 4 ஆண்டுகள் எடப்பாடியார் ஆட்சி செய்து வருகிறார். ஸ்டாலின் கணக்கு எல்லாமே தப்புத்தப்பாகவே போகும்.
இன்றைக்கு ஊர் ஊராக போய் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். அதை செய்வேன், இதை செய்வேன் என்று மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார். ஏற்கனவே பார்லிமெண்ட் தேர்தலில் இதுபோன்று பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றதை போல சட்டமன்ற தேர்தலிலும் அதே போன்று பொய் பிரச்சாரம் செய்து வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது இப்போது நடக்காது. மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தது, மத்தியில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் தி.மு.க. 14 ஆண்டு காலம் இருந்தது. அப்போது தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? தமிழகத்திற்காக என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற்று கொள்ளையடித்தீர்கள். நீங்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் சென்னை மாநகர மேயராகவும் இருந்தீர்களே? என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யவில்லை.
இன்று அம்மாவின் அரசு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்திருக்கிறோம். 6 புதிய மாவட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் 313 ஏழை மாணவர்கள் இன்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்று இருக்கிறார்கள். 92 பேர் பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு கல்விக்கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. துறைதோறும் சாதனைகளை செய்து இன்று மத்திய அரசிடமிருந்து விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் இதனை எல்லாம் செய்தீர்களா?
நீட் தேர்வை கொண்டு வந்தது நீங்கள். இப்போது அதனை எதிர்க்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம், கபட நாடகம். மக்கள் உங்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தி.மு.க. என்றாலே அது ஒரு வன்முறை கட்சி. நீங்கள் கடந்த தி.மு.க. ஆட்சியில் செய்த அட்டூழியங்கள், அராஜகங்கள், வன்முறைகளை மக்கள் மறக்கவில்லை. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். அ தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கிறது. எனவே இவை எல்லாம் மக்கள் எண்ணிப்பார்த்து மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த தொகுதியில் 12.5 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான 750 பேர் அமரும் வகையில் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி செலவில் ஏரி குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு இன்று தண்ணீர் நிரம்பி இருக்கின்றது. புதிய தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 4 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இந்த பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி இருந்தது. இப்போது பெய்த கடும் மழையில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததா? சொல்லுங்கள்.
நான் காரில் போகும்போது காரை நிறுத்தி மக்கள் மழைநீர் தேங்காமல் இருந்ததற்காக என்னைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள். முழுமையான சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன. மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆட்சி தருவோம் என்கிறார்கள். ஆனால் யாரும் கலைஞர் ஆட்சியை தருவோம் என்று சொல்லவில்லை. கலைஞர் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் மக்களிடம் செல்லமுடியாது. கமலஹாசன் எம்.ஜி.ஆரின் மடியில் தவழ்ந்தவன் என்கிறார். சினிமாவில் பணத்தை வாங்கிக்கொண்டு அப்படி நடித்தார். எம்.ஜி.ஆர். வள்ளல். கமலஹாசன் மக்களுக்கு ஏதாவது செய்தது உண்டா? மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம் அ தி.மு.க.
எடப்பாடியார் யதார்த்தமானவர். அவர் ஒரு விவசாயி. சாதாரண கிளைச்செயலாளர் பதவியில் இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து வந்தவர். ஏழை எளிய மக்களின் கஷ்டங்கள் அவருக்கு தெரியும். எனவே தான் அவரது திட்டங்கள் ஒவ்வொன்றும் ஏழைகள், விவசாயிகளை நோக்கியே இருக்கும். பெண்களுக்கு அம்மாவின் ஆட்சியில் தான் பாதுகாப்பு உள்ளது. ஆட்சியில் இல்லாத தி.மு.க.வினர் பிரியாணி கடை, அழகு நிலையம் ஆகியவற்றில் செய்த அடாவடிகளை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மக்களை பற்றி சிந்திக்கும் இயக்கம் அ தி.மு.க. மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி தொடர இரட்டை இலைக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் முடிவில் பென்ஜமின் பேசினார்.
இந்த கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் ஒய்.ஜவஹர் அலி, குண்டு கல்யாணம், புடையூர் பாலசுந்தரம், பிராட்வே குமார் மற்றும் பகுதி செயலாளர்கள் மதுரவாயல் ஏ.தேவதாஸ், வலசை கே.தாமோதரன், நொளம்பூர் எம்.எம். இமானுவேல், காரம்பாக்கம் இ.கந்தன், மகளிர் அணி மாவட்ட வளசை பி.மஞ்சுளா முன்னாள் மாவட்ட செயலாளர் கா.சு. ஜனார்த்தனன், மணிமேகலை, புலவர் ரோஜா, தி.ப.கண்ணன், தேவேந்திரன், ஜாவிட் அகமத், இ.சி.சேகர், வழக்கறிஞர் அந்தமான் முருகன், வழக்கறிஞர் து.சூரியநாராயணன், வழக்கறிஞர் அருள்தாஸ் ,லயன் நாகநாதன், ஆர்.முனியன் எம்.எஸ்.பச்சையப்பன், மாணவர் அணி செயலாளர் கே.சதிஷ்குமார், வட்ட செயலாளர்கள் தென்றல்குமார், பரத், ராமபுரம்வேணுகோபால், சத்தியநாதன்,எம்.கே.குமார், எம்.ஜி சந்திரசேகர்,பூத்தபேடு ரகு, மகேந்திரமணி, ராஜ்குமார் பச்சையப்பன், ராஜகோபால், எம்.ஆர்.வேலாயுதம், பி.எஸ்.குமார், பொது குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.அருள்யுகா,வனிதா, மற்றும் ஆர்.எம்.தமிழரசி, பிரியாதயாளன், ராஜேஸ்வரி, கலா, போரூர் சங்கீதா, பத்மாவதி, நான்சிகோமதி, செளதாம்மிகா, வரதா மதுரவாயல் எம்.பாரதி, மதன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் ஏ.தாமோதரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பக்ரீத் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக இ.பி.எஸ்.
-
சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்: சுப்மன் கில் பேட்டி
06 Jun 2025மும்பை : சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட்...
-
இன்று பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே திடீரென மோதல்: நன்றியுணர்வு அற்றவர் என காட்டம்
06 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்
06 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
06 Jun 2025சென்னை : 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ள முத
-
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
06 Jun 2025சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
06 Jun 2025சென்னை : போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
-
நீதிபதி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
06 Jun 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ள
-
இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்
06 Jun 2025புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
06 Jun 2025சென்னை, ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஓய்வு அறிவிப்பு எனது தந்தையை சோகத்தில் ஆழ்த்தியது: ரோகித் சர்மா
06 Jun 2025மும்பை : தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்புகள்
06 Jun 2025காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
-
யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
06 Jun 2025ஹராரே : ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
டெல்லியில் சட்ட விரோத குடியேற்றம்: 71 வெளிநாட்டினர் நாடு கடத்தல்
06 Jun 2025புதுடெல்லி : டெல்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்த வெளிநாட்டினர் 71 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
-
மாநிலங்களவைத் தேர்தல்: இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
06 Jun 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை
06 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
-
மக்கள் சந்திப்பு பயணம்: ஜூலையில் தொடங்குகிறார் விஜய்
06 Jun 2025சென்னை, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக தனது குரலை அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா..? இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Jun 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பணமோசடி வழக்கில் கைதான அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
06 Jun 2025சென்னை, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி.
-
மே மாத சிறந்த வீரர் மெஸ்ஸி
06 Jun 2025ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.
-
அமெரிக்காவில் ரயிலில் அடிப்பட்டு பெண் பலி
06 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
-
தருமபுரி அருகே சாலை விபத்தில் மலையாள நடிகர் தந்தை உயிரிழப்பு
06 Jun 2025தருமபுரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார்.
-
ஓய்வு பெற்ற நீதிபதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
06 Jun 2025சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
06 Jun 2025திருச்சி : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.