எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பழனி : வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி வழிபடுகின்றனர். வழக்கமான நாட்களைவிட வாரவிடுமுறை, முகூர்த்த நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
காலை முதலே பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல பயன்படுத்தும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதாவது, தரிசனம் செய்வதற்கு சுமார் 1 1/2 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.
வெளியூர் பக்தர்கள் பழனிக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. அதேபோல் தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு செல்ல பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


